நினைவுகள்..!

நினைவுகள்

கடந்து போனாலும் கனமாக
இருக்கிறது மனது.. கலைந்து
போனாலும் கனவாக
இருக்கிறது நினைவு..

நினைவுகள் நல்லதாக
இருந்தாலும் சரி கெட்டதாக
இருந்தாலும் சரி நம்ம கூட
தான் இருக்கும்..
மறக்க முடியாது.

நினைவுகள் நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்.. மனம்
என்னவோ நினைவுகளை
தான் நேசிக்கிறது..

தொலைத்த இடமும்
தெரிகின்றது.. தொலைந்த
பொருளும் தெரிகின்றது..

வலியும் உணரப்படுகிறது..
ஆனால் திருப்பி மீட்கத்தான்
முடியவில்லை. எல்லாமே
நினைவுகளாக.

உஷா வரதராஜன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *