இலங்கைசெய்திகள்

வெளியேறிய பல வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்..!

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால்,

இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பணிப்பாளர் நாயகம் (மருத்துவ சேவைகள்) வைத்தியர் ஜி. விஜேசூரிய,

விசேட வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உட்பட பல வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியதையடுத்து,

இலங்கையில் அண்மையில் வைத்தியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் விளைவாக,

எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

எவ்வாறாயினும், விசேட வைத்தியர்கள் உட்பட பல வைத்தியர்கள் தற்போது இலங்கைக்கு திரும்பி வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த வைத்தியர் விஜேசூரிய,

அதற்குப் பதிலாக பல வைத்தியர்கள் தமது விடுமுறைகளை இரத்து செய்துவிட்டு இலங்கைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவித்தார்.

இலங்கைக்கு திரும்பும் வைத்தியர்கள் மூலம், தேவையான வைத்தியசாலைகளுக்கு விசேட வைத்தியர்களை நியமிக்க சுகாதார அமைச்சினால் முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுகாதாரப் பணியாளர்கள் நாடு திரும்புவதன் மூலம் இலங்கையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என வைத்தியர் விஜேசூரிய நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *