பொலிஸ் நிலைய அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை தம்மிடம் ஒப்படைக்கவும். – பதில் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு இடமாற்றம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையிலான முரண்பாடு அரசியலமைப்பு பேரவைக்கு வந்துள்ளது.

பொலிஸ் நிலையங்களுக்கான அதிகாரிகளை நியமனம் வழங்கும் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கடந்த வாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் எழுத்துமூலக் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தேசிய பொலிஸ் ஆணைக்குழு எழுத்து மூலமான பதில் கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன், தேசிய பொலிஸ் ஆணைக்குழு அந்தக் கடிதத்தின் பிரதியை அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைத்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தின் உள்ளக விவகாரங்களில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலையிடுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கு, திரு.வீரசூரிய, இடமாற்றங்களை வழங்குவதற்குத் தேவையான அதிகாரம் இன்றி, பெயருக்கு மாத்திரம் தான் பொலிஸ் மா அதிபராக இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்தவீரசூரிய (22) ஊடகவியலாளர் மாநாட்டில், இடமாற்றம் தொடர்பாக சட்டமா அதிபரிடம் கருத்து கேட்டதாகவும், அவர் நியமனம் அல்ல இடமாற்றங்களை வழங்கியதால், அதற்கான அதிகாரம் தமக்கு இருப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *