இலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

வங்காலையில் கடல் பசுவின் இறைச்சியுடன் ஒருவர் கைது

மன்னார், வங்காலை அக்னேஷ்புரத்திலுள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடல் பசு இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் வங்காலை , அக்னேஷ்புரத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ கடல் பசு இறைச்சி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *