மணிவிழாக் காணும் உடுப்பிட்டி அ.மி. கல்லூரி அதிபர் திரு.எஸ்.கிருஷ்ணகுமார்
உடுப்பிட்டி அமெரிக்கன் மிக்ஷன் கல்லூரி அதிபர் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணகுமார் வரும் செப்டெம்பர் மாதம் 12ம் திகதி அன்று ஓய்வு பெறுகிறார். அவரின் உன்னத சேவையை பாராட்டி கல்லூரி சமூகமும் கல்லூரி நலன்விரும்பிகளும் இணைந்து அவருக்கு விழா எடுக்க உத்தேசித்துள்ளனர்.
கல்லூரி அதிபரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி அவரின் ஓய்வுபெறும் நாள் மாபெரும் விழாவாக “மணிவிழா” கொண்டாடப்படவுள்ளது.
நிகழ்வுக்கு பணியாளர் நலன்புரி சங்க தலைவர் திரு.தர்மதேவன் அவர்கள் தலைமை தாங்கவுள்ளார்.
காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த நிகழ்வு கல்லூரியின் திறந்த வெளி அரங்கில் கல்லூரி மாணவர்களின் நிகழ்வுகளுடன் இணைந்த நிகழ்வாக மிக விமரிசையாக கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.