குஞ்ஞுண்ணி கவிதைகள்

‘கு’ கடந்தால் ‘ஞ்ஞு’
‘ஞ்ஞு’ கடந்தால் ‘ண்ணி’
‘ண்ணி’ கடந்தால் குஞ்ஞுண்ணி
குஞ்ஞுண்ணி கடந்தால்.

நானொரு பூவிலிருக்கிறேன்
இன்னொரு பூவின்
தேனையருந்தத் தவிக்கிறேன்.

என் முதுகிலொரு யானை
என் நாக்கிலொரு ஆட்டுக்குட்டி
நானொரு எறும்பின் குட்டி.

நான்
நானென்ற சொல்லின்
இடையிலிருக்கவா
பக்கத்திலிருக்கவா
முன்னாலிருக்கவா
பின்னாலிருக்கவா
மேலேயிருக்கவா
கீழேயிருக்கவா
எள்ளில் எண்ணெய் போலிருக்கவா
நானென்ற சொல்லாயிருக்க

எனக்கு நான்
கொஞ்சமும் உதவுவதில்லை
அதை இப்படி விளக்கலாம்
ஒரு கையில் அரிப்பெடுத்தால்
அதே கையால்
சொறிய முடியாதல்லவா

நான் இனி
என்னுடைய அப்பனாவேன்
பிறகு அம்மையாவேன்
பிறகு மகளும் மகனுமாவேன்
பிறகு
நானென்ற நானாவேன்

உயரமில்லாததே
எனது உயரம் என்பதை நானறிவேன்

நானெ்ற குஞ்ஞுண்ணியா
குஞ்ஞுண்ணி என்ற நானா

அரண்மனையை காக்கும்
நாயல்லலவா நான்
உனது முகவரியைக்
கேட்கட்டுமா நாயே.

நான் யாருடைய நினைவு.

என்னைப் பெற்றது நான்தான்.

பெண்ணின் இடையைப் பார்க்காததால்
நான் ஒரு கால் கவிஞன்
பார்த்திருந்தால்
அரைக் கவிஞன் ஆகியிருப்பேனா
அல்லது
அரைக்கால் கவிஞன் ஆகியிருப்னோ
~~

எழுதுவது :
மலையாளம் குஞ்ஞுண்ணி மாஷ் தமிழ் ராஜன் ஆத்தியப்பன்