சுகதேக வாழ்விற்கு குறிப்புகள் 30

1. தண்ணீர் நிறையக் குடியுங்கள்.
2. காலை உணவு ஒர் அரசன் அரசியைப் போலவும், மதியஉணவு ஒர் இளவரசன்/இளவரசியைப் போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ணவேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக்கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.
4.உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5.தினமும் முடிந்தளவு ஓடியாடி விளையாடுங்கள்.
6. நிறையப் புத்தகம் படியுங்கள்.
7. ஒருநாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருக்க பழகுங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10.உங்களை ஒரு பொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை இன்னொன்று.
11.எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12.உங்களால் முடிந்தளவு வேலை செய்யுங்கள்.அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13.மற்றவர்களைப் பற்றிப் புறம்பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14.நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கனவுகாணுங்கள்.
15.அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேரவிரயம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே இருக்கிறது.
16.கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்தகாலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்து விடும்.
17.வாழும் இந்த குறுகியகாலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18.எப்பொழுதும் மகிழ்சியாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
19.வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக்கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20.முடியாது என்று சொல்ல வேண்டிய இடங்களில் தயவுசெய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
21.வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள்.
22. மன்னிக்கப்பழகுங்கள்.
23. 70வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24.அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25.உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26.உங்கள் மனதிற்கு எதுசரியென்றுபடுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27.ஒவ்வொருநாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28.உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதைதேடி அனுபவித்துக் கொண்டேஇருங்கள்.
29.உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எதுஅழகை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கி விடுங்கள்.
30.எந்த சூழ்நிலையும் ஒருநாள் கண்டிப்பாக மாறும்.

எழுதுவது ; துன்னையூரான் (ஜனா)