கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் திருமந்திர அரண்மனை ஒன்று நிறுவப்படவுள்ளது.

இந்த அரண்மனையை இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் 9 கோடி ரூபா செலவில் இதனை அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமந்திர அரண்மனையில் கருங்கல்லினால் அமைக்கப்பட்ட 108 சிவலிங்கங்களும், கருங்கல்லில் பொறிக்கப்பட்ட 3000 திருமந்திர பாடல்களும் பிரதிஸ்டை செய்து வைக்கப்பட உள்ளது.

சிவராத்திரி தினமான இன்று இந்த சிவலிங்கங்கள் கொக்கட்டிச்சோலை வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு பிரதிஸ்ட்டை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றிருந்தன.

இதற்கான பணிகளை இலங்கை சிவபூமி அறக்கட்டளை நிறுவனமும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலய பரிபாலன சபையினரும் இணைந்தே மேற்கொண்டுள்ளனர்.

இதை கொக்கட்டிச்சோலை ஆலயத்திற்கு இந்த அரண்மனையை நிறுவுவதற்கு முன்னின்று செயலாற்றும் சிவபூமி அறக்கட்டளை நிறுவனம் , கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் நெறிப்படுத்தப்படும் அமைப்புகளுள் ஒன்றாகும்.

அந்த நிறுவகத்தின் சமூக சமயப்பணிகளின் தொடர்ச்சியாக, கிழக்குமாகாணத்தின் நீண்ட கால சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்களில் ஒன்றான கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வர ஆலயத்தில் திருமந்திர அரண்மனை நிறுவுவதற்கு ஆயத்தப்பணிகள் இன்று சிவராத்திரி நாளில் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எழுதுவது : ராமசாமி துரைரட்ணம்