மனம் கொத்தி….

எதிர்ப்பார்ப்புகளும்
ஏக்கங்களும்
கொல்லுகிறது..
கிள்ளுகிறது…

மூன்று நான்கு
மணித் துளிகளில்
நிகழ்நிலை
நிறுத்தப் படவே –

மனம்
என்னவென்று அறியாமல்
நிலை குலைந்து
போகிறது….

புரிய முடியாத
நேரங்கள்
நெறுக்குகிறது…..
நொறுக்குகிறது…

அப்படியோ …
இப்படியோ..
எப்படியும் புரியாமல்
புலம்பித் தவிக்கிறது…

தொடர்ந்து பதிவுகள்
கேட்கவில்லை
தொடர்ந்து இடைவெளிக்கு
காரணம் தேடுகிறது…

என்ன ஆகியிருக்குமென
எண்ண அலை
தேய்வதும்
மேய்வதுமாய்..

இத்தனை உரிமைகள்
இருக்கக் கூடாதோ என்னவோ…!?

ஆதாலால் தான்…,

யதார்த்தமாய் இருந்து விடலாம் என்று….!

எழுதுவது : வெண்பா பாக்யா
சென்னை
தமிழ்நாடு