வெறுமை

புரியாத
பொழுதுகளில்
புரிந்தது போல்
பேசுகின்றேன் …

புரிந்த
பொழுதுகளில்
புரியாதது போல்
பேசுகின்றேன்…

யார்
எத்தனை முறை
பேசியிருந்தாலும்
அப்படித்தான்…

நேற்றொரு
பொழுது,
புரியாத
பொழுதுகளையும்
புரிந்த
பொழுதுகளையும்
ஒரு
வெற்றுக்கூட்டில்
போட்டு….

சுருட்டி மடக்கி
காப்பிட்டு
பாதுகாத்து
வைத்திருந்தேன் …

அது
இன்று,
எவர் கையிலோ
மாறி…..

வெற்று
புலம்பல்களாய்…

எழுதுவது ; இராஜேஷ் சங்கரப்பிள்ளை