பெண்கள் நாள்


பெண்ணாய் பிறத்தல்
பெருந்தவம் என்றான்
பெருமீசை பாரதி


பெருக்கெடுக்கும் ஆற்றையும்
பிறந்த மண்ணையும்
பெயரிட்ட நாட்டையும்
பேசிடும் மொழியையும்
பயணிக்கும் கப்பலையும்
போற்றிடும் தெய்வங்களையும்
புகலிட பூவுலகையும்
பெண்ணாக உருவகித்து
பணிந்தே புகழும்
புவிமாந்தர் பலரும்


பக்கத்தில் தன்னகத்தில்
பார்த்திடும் பழகிடும்
பாவையர் யாவரையும்
பரிவுடனும் பண்புடனும்
பாசாங்கற்ற பாசத்துடனும்
பாராட்டி நேசித்தால்
பாரினில் பொதுமக்களும்
பாவையர் நன்மக்களும்
பாங்குடன் கைகூப்பி
பணிந்தே வணங்கிடுவரே
பெண்மக்கள் மகிழ்ந்திடுவரே

எழுதுவது;
அகிலா பொன்னுசாமி
சபா, மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *