வெகுண்டெழு தமிழா!

புதிய விடியலில் புத்தாக்கம் பழகிடு
பழகிடும் வழக்கில்
பயனுற பயின்றிடு
முதிய அகவையில்
முன்னிலை வகித்திடு
முற்றிய அனுபவம்
முழுமையாய் செயல்படு

பழைய அனுபவம் பாடமாய் ஏற்றிடு
பயண பாதையின்
படிகளாய் மாற்றிடு
உழைத்த உத்தமர்
உறுதியாய் உயர்ந்திட
உண்மை உலகத்தில்
ஒன்றாய் இணைந்திடு

ஓங்கிய தமிழ்மொழி
உலகலாம் உரைத்திட
தேங்கிய திசைமொழி
தேடியே களைந்திடு
தூங்கிய சிந்தனை
துடித்தெழ எழுந்திடு
தாங்கிய தாய்மொழி
தலைமேல் ஏந்திடு

திட்டங்கள் தீட்டியே
திறமையை காட்டிடு
சட்டங்கள் நாட்டிட
சத்தியம் செய்திடு பட்டங்கள் பதவிகள்
படித்துநீ பெற்றிடு
மட்டங்கள் போடாமல்
மாண்புடன் வாழ்ந்திடு

மாசறக் கற்றிடு மகுடத்தை சூட்டிடு
மாந்தர் நேயத்தை
மறவாமல் வழங்கிடு
நேசத்தில் நயமுடன் நட்பினை நோக்கிடு
வேசத்தை புரிந்துநீ
வீரமாய் வெகுண்டெழு.

எழுதுவது : உத்திராபதி இராமன், DSP,
IPPO , மலேசியா