பெண்மை எனும் பேருண்மை

உயிர் படைத்த இயற்கை(இறை)யின் அன்பில் பெண்மை வியப்பை விதைக்கிறாள்!

உயிர் கொடுத்த
ஆணின் அன்பில்
பெண்மை தகப்பன்
படைக்கிறாள்!

உயிர் வளர்க்கும்
பெண்ணின் அன்பில்
பெண்மை தாய்மை
நிறைக்கிறாள்!

உயர் ஒழுக்கம் ஊட்டும்
ஆசிரியரின் அன்பில்
பெண்மை உலகம்
செதுக்குகிறாள்!

பாசம் வளர்க்கும்
சகோதரத்தின் அன்பில்
பெண்மை பண்பை
வளர்க்கிறாள்!

நேசம் கொடுக்கும்
நட்பின் அன்பில்
பெண்மை நம்பிக்கை
கூட்டுகிறாள்!

உயிர் கலந்த
கள்வனின் அன்பில்
பெண்மை வாழ்வின்
உச்சம் காட்டுகிறாள்!

உறவுகள் காட்டும்
உண்மை அன்பில்
பெண்மை உயர்வு
சேர்க்கிறாள்!

உலகம் காட்டும்
உயர்ந்த அன்பில்
பெண்மை மனிதம்
காக்கிறாள்!

உணர்வு சிறந்த
சேயின் அன்பில்
பெண்மை தெய்வம்
ஆகிறாள்!

எழுதுவது:

மாலதி இராமலிங்கம், புதுச்சேரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *