பெண்மனதை உணர்ந்த ஒவ்வொரு ஆணும் மகாராஜக்களே! – சிறு குறிப்பு

பெண்ணுக்குரிய மரியாதை எப்போதும் அவள் ஆண்களிடத்தில் எதிர்பார்ப்பாள்.

பெண் என்றால் இப்படித்தான் என்று சமூகம் போட்ட வேலிகள் பல இருக்கலாம். ஆனால் பெண்மைக்குரிய மன உணர்வுகள் எப்போதும் அது பெண்மைக்கே.

அன்றைய காலம் பெண்களை முத்து , பவளம் என வர்ணித்து கண்ணியம் கொடுத்தாலும் இன்றைய காலம் அது முற்றிலும் இல்லை.


பொதுவாக பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது, புரிந்து கொண்டு வாழுதலும், அன்பையும் மாத்திரமே , பணம் , பட்டம் , பதவி அனைத்தையும் எதிர்பார்ப்பதை விட எளிமையாக வாழ்ந்தாலும் நிம்மதியாக பரஸ்பர அன்பை பகிர்ந்து வாழுதலாகும்.

பெண்ணின் ஒவ்வொரு உணர்வுகளை முற்றுமுழுதாக ஒர் ஆண் புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும் அதை உணர்ந்து வாழ்க்கை வாழும் ஆண்கள் மகாராஜக்களே.

எழுதுவது : பஹ்ரியா_பாயிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *