அரச ஊழியர்கள் விருப்பின்பேரில் இனி நீண்டகால சம்பளமற்ற  லீவு

அரச ஊழியர்களுக்கான  தற்போதுள்ள விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவர்கள் தடையின்றி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக அமையும் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த வரவிருக்கும்  புதிய விதிகளின் பிரகாரம்,  கல்வி நெறி  அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக ஒரு அரச ஊழியர்  தனது அரச பதவிக்காலத்தில் உயர்ந்த பட்சம் விரிப்பின் பேரில்  5 வருடங்கள் சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார சிக்கல்  நிலைமைகளை கருத்தில் கொண்டு, அரச பணியாளர்கள்  வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கு அல்லது வேறு பயன்தரக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட  பணிகளில் ஈடுபடுவதற்கு ,  அவர்களின் அரச பணிக்கால ஆண்டு மற்றும் சிரேஷ்ட நிலைகள்,  மற்றும் ஓய்வூதியத்திற்குப்  எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போது நடைமுறையிலுள்ள ஒழுங்குக்கோவையில் திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

அதன்படி  திருத்தப்பட்ட ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிட வேண்டி,  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.

எழுதுவது : திசோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *