பெற்றோல், டீசல் விலைகளும் மீண்டும் அதிகரிக்கிறது| சிறீலங்கா

ஜூன்மாதம் 26ம் திகதி இன்று அதிகாலை 2.00 மணி முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பை உடன் அமுலுக்கு கொண்டு வரும் வகையில்  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

அந்தவகையில், Octane 92 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை  50 ரூபாவால் அதிகரிக்கரிக்கப்பட்டு 470 ரூபாய்களுக்கு விற்கப்படும் என் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல Octane 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையும்  100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 550ரூபாய்களுக்கு விற்பனையாகும்.

மேலும் டீசல், லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாய்களால் அதிகரித்து 460 ரூபாய்களுக்கும்,  சூப்பர் டீசல் ,லீற்றர் ஒன்றின் விலையை 75 ரூபாய்களால் அதிகரித்து 520 ரூபாய்களுக்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த விலை அதிகரிப்புகளால் சந்தைகளில் விற்பனையாகும் ஏனைய பொருட்களுக்குமான விலைகளும் மேலும் சடுதியாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாக சிறீலங்கா பொருளாதார வல்லநர்கள் குறிப்பிடுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

எழுதுவது : திசோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *