இனிய வாழ்க்கை சிறக்க

கோடி கோடியாய் !
கொட்டும் அருவியாய் !
வீசியடிக்கும் காற்றாய் !
விடாது ஆர்ப்பரிக்கும் அலையாய் !

உள்ளுக்குள் ஊற்றெடுக்கும்

எதிர்காலக் கனவுகள்
எதிர்பார்த்தபடி இல்லாமல்

ஏமாற்றத்துடன் வாழும்

ஏழ்மையான மக்களுக்கு

ஏக்கமே வாழ்க்கையாய் !

துக்கமே துணையாய் !

பெருமூச்சே
பேரின்பமாய் !

குறைகளே குழந்தைகளாய் !

பரிதாபங்களே பதவியாய் !

விதியே விசித்திர விளையாட்டாய் !

விம்முகின்ற இதயத்தோடு !

வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக்க !

வழிதேடி அழையும்
வள்ளல்களின்
வழித்தோன்றல்களாகிய !

இளைய தலைமுறையே !
இனியொரு விதி செய்யுங்கள் !
இனிய வாழ்க்கை சிறக்க !

எழுதுவது
சா.தனலட்சுமி கோவிந்தராசு