கலையரசி-2022 அரங்கில் ஹரிச்சரணின் இசை நிகழ்வு

ஐக்கியராச்சிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் வழங்கும் கலையரசி நிகழ்வில் இந்த வருடம் பாடகர் ஹரிச்சரணின் இசைநிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு வரும் ஜூலை மாதம் 2ம் திகதி மிக பிரமாண்டமாக இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.

பாடகர் ஹரிச்சரண் உடன் பாடகர் ரக்ஸிதா மற்றும் இசைக்கஸைஞர் பெனட் ஆகியோரும் இணையவுள்ளனர். மேலும் இந்த இசை நிகழ்வை ஆதவன் ஒருங்கிணைக்கவுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த கோவிட் பெருந்தொற்றுகாலத்திற்கு முன்னதாக மிகப்பிரமாண்டமான முறையில் பாடகர் கார்த்திக் மற்றும் குழுவினருடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வைத்தொடர்ந்து , இந்தவருடம் பாடகர் ஹரிச்சரண் குழுவினருடன் பெரு நிகழ்வாக , கலையரசி நிகழ்வு இசை ரசிகர்களை சந்திக்கவுள்ளது.

வழமை போலவே இந்த வருடமும் கலையரசி நிகழ்வு டோக்கிங் மண்டபத்தில் (Grand Hall , Dorking Halls) இடம்பெறவுள்ளது.

ஏற்கனவே பல்வேறு செயற்திட்டங்களை தாயக மக்கள் சார்ந்து செயற்படுத்திவரும் யாழ் இந்துக்கல்லூரி பழையமாணவர்கள் சங்கம், இந்த விழாவின் மூலம் சேர்க்கப்படும் நிதியானது தாயகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிக்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக யாழ் இந்துவில் பரீட்சை பெறுபேறுகளை முன்னேற்றுவதற்காக மாலை நேர வகுப்புக்களை நடாத்தும் அதேவேளை , “அறிவுப்பாலம்” என்னும் பெருந்திட்டத்தின் கீழ், தண்டுவான், முல்லைத்தீவில் மகாதேவா படிப்பகமும் சம்பூர், திருகோணமலையில் சபாநாயகம் படிப்பகமும், இவர்களால் நடத்தப்படுகின்றது என்பது குறிபிடத்தக்கது.

நிகழ்வு தொடர்பான மேலதிக விடயங்களை வெற்றிநடை நாட்காட்டியில் கீழே காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *