தமிழ் மரபுத்திங்களில் யாழ் – கிங்ஸ்டன் இரட்டை நகர பதாகை திறப்பு

தமிழ்மரபுத்திங்களை  பெருமெடுப்போடு உலகமெங்கும் வாழும் தமிழரெல்லாம் கொண்டாடி வரும் இன்றைய நாள்களில், லண்டனில் யாழ் – கிங்ஸ்டன் இரட்டை நகரங்கள் பதாதை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் தமிழர்களும் ஏனைய இன மக்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

விசேடமாக இங்கிலாந்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருந்தனர்.

யாழ் – கிங்ஸ்டன் பதாதை திறந்துவைக்கப்பட்ட நிகழ்வைத் தொடர்ந்து, தமிழர் கலாசார நிகழ்ச்சிகள், அடுத்த தலைமுறையை சார்ந்த பிள்ளைகளின் நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு விசேட நிகழ்ச்சிகளும் நிகழ்வை சிறப்பித்திருந்தது.