புத்தகப் பிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு|North West லண்டனில் தமிழ் புத்தக கண்காட்சி

லண்டனில் Harrow, மற்றும் Wembley போன்ற இடங்கள் உள்ளடங்கலான வடமேற்கு லண்டனில் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் கூடிய நிகழ்ச்சியொன்று  ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.


வரும் வாரவிடுமுறை நாள்களான ஏப்பிரல் 20 மற்றும் 21ம் திகதிகளில் குறித்த நிகழ்ச்சி ஏற்பாடாகியுள்ளது.


London Tamil center இல் நடைபெறும் இந்த நிகழ்ச்சி காலையிலிருந்து மாலை வரை இடம்பெறும் முழுநாள் நிகழ்ச்சி என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த புத்தக கண்காட்சியில்
சிறுவர் தமிழ் நூல்கள்,
அரிய தமிழ் இலக்கண, இலக்கிய , மருத்துவ, பழந் தமிழ் நூல்களுடன் ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான  நாவல், சிறுகதை, கவிதை, அரசியல் தலைப்புகளிலான அனைத்து நூல்களையும் பெறமுடியும் 

எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *