”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” யின் ”மீன்” சின்னம் எதனை அடையாளப்படுத்தமுடியும்?

பாண்டிய, சோழ, சேர அரசுகளின் மீன், புலி, அம்பு – வில் சின்னங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன?

இலங்கையின் கட்சிக்காரர்கள் தத்தமது கட்சியின் சின்னமாகப் பலவற்றைத் தெரிந்தெடுக்கின்றனர். தங்களது தெரிவுக்கான விளக்கங்களையும் வாக்காளர்களுக்குக் கொடுக்கின்றனர்.

தமிழரின் அரசியல் கட்சிகளைச் சார்த்தவர்களும் தமது வெவ்வேறு சின்னங்களுக்குப் பலவித விளக்கங்களை அறிவியல், மற்றும் அடிப்படைகளில் கொடுத்து வருகின்றனர்!

தமிழரசுக் கட்சியினர் தமது வீடு சின்னத்திற்கு பலவித விளக்கங்களை 1947ஆம் ஆண்டிலிருந்து கொடுத்துவருகின்றனர்.

முகநூலில் கூட, வீட்டுச் சின்னத்திற்கு தமிழரசுக் கட்சியினர் பலவித விளக்கங்களைக்கொடுத்துப் பிரசாரங்களைச் செய்கின்றனர்.

இதைப்போலவே வீணை, சைக்கிள், ஏனைய சின்னங்களுக்கும் அந்தந்தக் கட்சி சார்ந்தவர்கள் வெவ்வேறு விளக்கங்களைக் கொடுக்கின்றனர்.ஆனால், மிகவும் அண்மைக் காலத்தில் உருவாக்கப்பட்டதே C.V. விக்னேஸ்வரனின் தலைமையலான ”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” என்பதாகும். இக்கட்சியினர் தமது க்ட்சிச் சின்னமாக ”மீன்” இனைத் தெரிவு செய்துள்ளனர்.

இந்தநிலையில், ஒற்றை மீன் அடையாளத்திற்கு என்ன விளக்கத்தினை ”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” கட்சிக்காரரும். ஏனையவர்களும் வாக்காளர்களுக்குக் கொடுக்கின்றனர்?

அந்த விளக்கம் எவ்வளவுக்கு அறிவியல்பூர்வமானது?இந்தநிலையில், இங்கு ”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” யின் ”மீன்” சின்னம் எதனை அடையாளப்படுத்தமுடியும் என்பது ஆராயப்படுகிறது.”மீன்” அடையாளமானது பாண்டிய அரசின் அடையாளம் என்பர். பாண்டியரின் கொடியை ”மீன் கொடி” என்பர்!! ”மீன்” என்பது எதனையாவது அடையாளப் படுத்துகிறதா? அதன் பொருள்கள் (meaning) எவை? ”மீன்” என்பது fish என்பதையும் குறிக்கும். இதன் பொருள்களை அறிய, எமக்கு தொல்காப்பியன் குறிப்பிட்ட மொழிப்பொருட் காரணம் என்ன என்பது தெரியவேண்டும்.

”மொழிப்பொருட்காரணம் விழிப்பத் தோன்றா ” எனத் தொல்காப்பின் கூறியதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் என்பவர்கள் எழுதியிருந்து உரை, விளக்கம் என்பவைகளை ஆராய்ந்து அறிந்தால்தான் தமிழ் மொழியில் ஒரு சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதை ஒருவர் அறியமுடியும்.

துரதிஷ்டவசமாக பிற எவரும் இதை ஆராய்ந்து அறியவில்லை. ”மீன்” என்பது, ”ம் + ஈ + ன்” ஆகும்“. இது, ”மயக்க(ம்) உள்(ன்) நிறைவு மிகுதி(ஈ) தன்மையாகும். ”மயக்க உள் நிறைவு மிகுதித் தன்மை” யை அறம், நடுவு நிலைத் தன்மை என்பவைகளில் அடையாளம் காணலாம்.

இதை நடவிலே சமச்சீராக முள் உள்ள fish இலும் அடையாளம் காணலாம். ஆங்கிலத்தில் “mean” value எனக் கூறுவதை அவதானிக்கவும்!! இந்த நிலையில், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினது சின்னமும், பாண்டிய அரசின் சின்னமும் ”அறம்” (Dhamma) என்பதை அடையாளப்படுத்தமுடியும்.!! பண்டைய காலத்தில் இலங்கை, தென்னிந்தியத் தமிழர்கள் ”மஹாயாண” பௌத்தர்களாகவே இருந்தனர்.

இந்தநிலையில், ”மீன்” சின்னமானது தமிழ் ”மஹாயாண” பௌத்தர்களை அடையாளப்படுத்துகிறது என்ற விளக்கத்தினைக் கொடுக்கமுடியும்!!

அடடா! தெரிந்தோ தெரியாமலோ தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் சரியான அடையாளத்தினைத்தான் கட்சிக்குத் தெரிந்தெடுத்துள்ளனரா?

ஆனால், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியினர் தமிழரது சமயமாக எதனைக் கூறுகின்றனர் என்பது மிக முக்கிய கேள்வியாகும்.இலங்கைத் தமிழ் மக்கள் இன்று சைவர்களாகவே உள்ளனர். அப்படியானால், அவர்கள் முன்னர் ”மஹாயாண” பௌத்தர்களாக இருந்ததை அடையாளப்படுத்தும் ”மீன்” சின்னம் எப்படி அவர்களது இன்றைய சைவத்துடன் ஒன்றும்?இங்குதான் ”சைவம்” என்றால் என்ன என்பதை ஆராய்ந்து அறியவேண்டியுள்ளது!!

சைவம் போதிப்பது என்ன என்பதைச் சரியாக ஆராய்ந்து அறியவேண்டியுள்ளது. ”சைவம்” என்பது பற்றியும், அதன் முழுமுதல் கடவுளான ”சிவன்” என்பது பற்றியும் ஆயிரக்கணக்கான சைவப் புலவர்களும், அறிஞர்களும். பேராசிரியர்களும் ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும், நுல்களையும் எழுதியுள்ளனர்.

ஆனால், அவர்கள் பண்டைய தமிழ் இலக்கியங்களையும், தொல்பொருட்களையும் தருக்க ரீதியாக, விஞ்ஞான ரீதியாக ஆராயவேயில்லை என்பதுதான் கசப்பான உண்மை. இன்றைய சைவாகள் பெரும் கோபமடையும் உண்மை என்னவென்றால். ” சைவம், சிவன் என்பவைகள் உண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்ட (Perfected) மஹாயாண பௌத்தமும், புத்தபெருமானுமாகும்!!

அதாவது, சைவமம். சிவனும் புத்தபெருமானதும், அவரது போதனையினதும் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டவைகளாகும். ”சிவன்” என்ற சொல்வானது, புத்தபெருமானைக் குறிக்கும்.

இதை விளங்கிக்கொள்ளவும், ஒருவருக்கு தமிழ் மொழியில் சொல் பொருள் உணர்த்தும் காரணம் தெரிந்திருக்கவேண்டும்.

”சிவன்” என்ற கடவுளின் பௌதீக தோற்றம் எதனை உண்மையில் அடையாளப்படுத்துகிறது என்பதைச் சரியாக அறிய, ஒருவருக்குப் புத்தபெருமானும், பௌத்தமும் எப்படி அடையாளப்படுத்தப்பட முடியும் என்பது பற்றி தெளிவான விளக்கம் இருக்கவேண்டும்.”சிவன்” என்பது, ”சிவ் + அன்” ஆகும். அதாவது, ”சிவ்” தன்மையானவன் ”சிவன்”!”சிவ்” என்பது, ”ச் + இ + உ” ஆகும். இது ”மேன்மை(ச்) நிறைவு9இ) உயிர்ப்பு(உ) தன்மை” யாகும். ”மேன்மை நிறைவு உயிர்ப்பு தன்மை” யினை, நாம் அன்பு, அருள், அறம், அறிவு, இன்பம். இனிமை தூய்மை, செம்மை, அழகு, ஒளி,……. என்பவைகளில் அடையாளங்காணலாம்.

ஆகவே, ”சிவன்” என்பது, இன்புபுமயமானவன், அருள்மயமானவன், அறவோன், அறிவன், இன்பமயமானவன், இனிமையானவன், தூயவன், செம்மையானவன், அழகன். ஒளிமயமானவன், ………இவைகள் எல்லாம் குத்தபெருமானையும் குறிக்கும். வீரசோழியம் உரை, மணிமேகலை என்பவைகளைப் பார்க்கவும்.இதைப்பொலவே, ”சிவன்” என்ற கடவுள் முக்குறி, திரிசூலம். உடுக்கு. …….. என்பவைகளுடன் அடையாளப்படுத்தியிருப்பது தனித்தனியாகவும், கூட்டாகவும் புத்தபெருமானை அடையாளப்படுத்துகின்றன.

உதாரணமாக, ”முக்குறி” என்பது, “நடுவுப்பாதை” ( the Middle Path) யினை அடையாளப்படுத்துகிறது. ”நடுவுப்பாதை” தான் பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம், பௌத்த அறம் (Dhamma) ஆகும். வெளியப்புறத்தின் இரு தம்பங்களும் எதிரெதிர் திசைகளை அடைாளப்படுத்த, நடுவுத் தம்பம் நேராக இருப்பதும் நடுவுப் பாதையினை அடையாளப்படுத்துகிறது. ஆகவே. தீரிசூலம் எனப் பிழையாக ஆய்வாளர்கள் கூறுவது, நடுவுப்பாதையைத் தான் அடையாளப்படுத்துகிறது. சிவனின் கையிலிருக்கும் உடுக்கு, சகலரும் கேட்கும் விதத்தில் ஒலி எழுப்புவது.

ஆகவே உடுக்க ஆனது நடவுப்பாதையானது சகலருக்கும் போதிக்கப்படுவதை அடையாளப்படுத்துகிறது!!ஆகவே, திரிசூலமும், உடுக்கும் இணைந்து, சிவன் என்ற கடவுள் ”நடுவுப் பாதை” யைச் சகலருக்கும் போதிப்பவன் ஆகிறான்.நெற்றியில் ”முக்குறி” யை இட்டு. சிவன் தன்னை நடுவுப்பாதையைக் கடைப்பிடிப்பவன் ஆக்கியுள்ளான்.

திரிசூலம். உடுக்கு என்பவைகளைக் காவி, தான் பிறருக்கு நடுவுப்பாதையைப் போதிப்பவன் ஆகியுள்ளான். ஆகவே, அவன் புத்தபெருமான் ஆகும்!!

இப்படி தேவாரங்களிலும், சிற்பங்கள், சிலைகளிலும் சிவன் விபரிக்கப்பட்டவைகள், ”சிவன்” என்பது புத்தபெருமானின் அடிப்படையில் கற்பனையாக உருவாக்கப்பட்டவன் என்பதை அசைக்க முடியாதபடி உறுதிப்படுத்தும். இதை வீரசோழியம் உரை, கம்பனின் தனிப் பாட்டுக்கள், சேந்தன் திவாகரம், சிங்கைச் சிலேடைவெண்பா, மற்றும் பண்டைய தமிழ் இலக்கியங்களுடாகவும் உறுதிசெய்ய முடியும்.

புத்தபெருமானையும், பௌத்தத்தினையும் அடையாளப்படுத்துவதை தேரவாத பௌத்தம் ஏற்காத நிலையில், இவைகளுடன் மஹாயாண பௌத்தம்தான் தொடாபுடையதாக இருக்கமுடியும்.மேலும், பௌத்த கலைகள் என்பது உண்மையில் மஹாயாண பௌத்த கலைகளாகத்தான் இருக்கமுடியும்.

”சிங்கள ”தேரவாத” பௌத்தக் கலைகள் என்பது உண்மையில் பகிடியான, கற்பனையான விடயம். எல்லாம் ”தமிழ் மஹாயாண பௌத்தம்” சார்ந்தவைகள்தான்!!

இந்தநிலையில். இதுவரை காலமும் போலிச் சிங்கள தேரவாத பௌத்த, சைவப் பிக்குகள், புலவர்களினதும். அறிஞர்களினதும் மர்ம நாவல்களைப் படித்தும், கதைகளைக் கேட்டும் பிழையான விளக்கங்களைக் கொண்டிருந்த சிங்கள தேரவாத பௌத்தர்களும், தமிழர்களும், பௌத்தம், சைவம் என்பவைகளின் வரலாறுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து சரியான முடிவுகளுக்கு வரவேண்டியுள்ளது!

இலங்கையின் பௌத்த வரலாற்று நூல்கள் குறிப்பிட்டுள்ள பௌத்தங்கள் எவைகள் என்பதைச் சரியாக அறிந்துகொள்ளவேண்டியுள்ளது. இலங்கையின் சமூகங்களை என்னென்ன பௌத்தங்களைப் பின்பற்றியிருந்தனர் என்பதைச் சரியாக அறியவேண்டியுள்ளது. இவை ஒருபுறமிருக்க, பாண்டியரது சின்னம் மீனாக இருக்கும்போது, சோழரின் சின்னமாகப் புலி என்பதும், சேரரின் சின்னமாக வில் – அம்பு என்பதும் பண்டைய இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன.

இந்த அடையாளங்களும், வேறு அடைாளங்களும் இடப்பட்ட பண்டைய நாணயங்கள், கல்வெட்டுக்கள் நூற்றுக் கணக்காக இலங்கையிலும், இந்தியாவிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன, கண்டறியப்பட்டுள்ளன. பாண்டியரின் சின்னம் அறத்தினை அடையாளப்படுத்துகிறதாயின், சேழரதும், சேரரதும் சின்னங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன?

இதற்கான விடையை இன்றுவரை பிற எவரும் கொடுத்ததில்லை. ஏன் எனில் அவர்களுக்கு மொழிப்பொருட்காரணம் என்ன என்பது தெரியாது! ஆனால் பல தமிழ் மொழி அறிஞர்களும், பேராசிரியர்களும் இருந்துதான் வருகின்றனர்!!

புலி, அம்பு – வில் என்ற இரண்டும் ”நடுவுப் பாதை” (the Middle Path) என்பதைத்தான் அடையாளப்படுத்துகின்றன. ”புலி” என்பதை Pulley என்ற இணையொலியுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.

விஷ்ணு தனது வலது சுட்டுவிரலால் சுழற்றும் வட்டச் சக்கரத்தை Pulley என்பதுடன் ஒப்பிடுக. இவைகளை ஏற்கனவே எனது முகநூலில் Notes என்பதில் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன.

நடுவுப்பாதையே பௌத்த தம்மம் ஆகும்!!

ஆகவே, தென்னிந்தியாவின் பண்டைய தமிழ் அரசுகளின் சின்னங்கள் பௌத்த அறத்தினைத்தான் அடையாளப்படுத்துகின்றன!!

இது பண்டைய தமிழர்கள் மஹாயாண பௌத்தர்களாக இருந்தனர் என்பதையே வலியுறுத்துகின்றன. ஏன் எனில் தேரவாத பௌத்தமானது புத்தபெருமானையும், பௌத்தத்தினையும் அடையாளப்படுத்துவதை முழுமையாக நிராகரிக்கிறது!!

இந்தநிலையில், ”தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” கட்சியும், அதன் தலைவர் விக்னேஸ்வரனும், தமது கட்சிச் சின்னத்திற்கு சரியான விளக்கத்தினைக் கொடுக்கவேண்டும், இலங்கையின் பௌத்த வரலாற்றினைச் சரியாக ஆராய்ந்து அறிந்து, சரியான விளக்கங்களை தமிழ், சிங்கள மக்களுப்பும், உலகிற்கும் விளக்கவேண்டியுள்ளது.

இலங்கை சிங்கள தேரவாத பௌத்தர்களுக்கு மாத்திரம்தான் சொந்தமானது என்பது பிழையானது, கற்பனையானது என்பதை ஆதாரங்களுடன் விளக்கி, தமிழர்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

உதயகுமார் அபிமன்யசிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *