அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்”

அ.பௌநந்தியின் “வலியும் வழியுமாக கவிஞர் சோ பத்மநாதன் கவிதைகள்” எனும் நூல் வரும் வார விடுமுறையில் வெளியிடப்படவுள்ளது

ஜீவநதி வெளியீடாக வரும் இந்த நூல் வரும் சனிக்கிழமை 26ம்திகதி மார்ச் மாதம் 2022 அன்று வெளியிடப்படவுள்ளது.

வடமராட்சியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய கல்லூரியில் மாலை 4 30 க்கு இந் நிகழ்வு ஆரம்பமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நூலின் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு சர்வேஸ்வராவும் கருத்துரையை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை பிரதி அதிபர் திரு லலீசன் அவர்களும் ஆற்றவுள்ளனர்.

நிகழ்வுக்கு ஓய்வுநிலை அதிபர் திரு இராகவன் அவர்கள் தலைமையேற்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வரும் 26ம் 27ம் திகதிகளில் இதே மண்டபத்தில் ஜீவநதி வெளியீட்டின் நிகழ்வாக ஃ தொடர் புத்தகக்கண்காட்சியும் இடம்பெறும் எனவும் இந்த நிகழ்வில் மொத்தமாக எட்டு புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *