இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி – 2022

இந்த வருட இலண்டன் தமிழ் புத்தகக்கண்காட்சி இலண்டன் ஈஸ்ட்காமில் இடம்பெறவுள்ளது.

மார்ச் மாதம் 26ம் திகதி சனிக்கிழமையன்று, Eastham இல் Kerala house தளத்தில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சென்னை புத்தகக்கண்காட்சியில் வெளியான நூல்கள் உட்பட இலங்கை,தமிழகம் மற்றும் புகலிட நாடுகளில் வந்த 800க்கும் அதிகமான நூல்கள் குறித்த நிகழ்ச்சியில் பார்வைக்கு வரும் என குறிப்பிடப்படுகிறது.

தாயகம் கடந்து புகலிட நாடுகளில் வாழும் வாசிப்பு மிகுந்தோருக்கு ஆர்வமுள்ள நிகழ்வாக அமையும் என்று சொல்லப்படுகிறது.

அத்துடன் வாசிப்புக்கும், தேடலுக்கும் ஏதும் குறிப்பிட்ட நூல் தேவையெனில் முற்கூட்டியே தெரியப்படுத்தினால் ,அவற்றை கிடைக்கவும் வழி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு காலை 10 மணியிலிருந்து இரவு 8மணிவரை இடம்பெறுவதோடு அந்நிகழ்வில் பல்வேறு அமர்வுகளாக நூல்கள் பற்றிய அறிமுக அமர்வுகளும் விமர்சன அரங்குகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *