வான் வருவானோ…..!

அன்பால் ஒரு அன்பை கண்டுணர்ந்து…!
அன்பை எல்லையில்லாமல் கொடுத்து….!
அன்பின் மொழியில் வார்த்தைகள் சேர்த்து.!
நினைக்கும் முன்னே என் கைக்கோர்த்து….!
வழியெங்கும் பள்ளங்கள் இருப்பினும்…!
காயங்கள் கொண்ட இரு நெஞ்சங்களை….!
ஒருவருக்கு ஒருவர் அன்பால் நிறைத்து….!
ஆயிரம் உறவுகள் வரலாம் வாழ்வில்….!
அத்தனையும் புரிதலோடு புணர்ந்து….!
அன்பின் பயணமே வாழ்வினை உணர்தல்..!
வான்வருவானோ மேகமாய் தொடர்வானோ!

எழுதுவது: கவிஞர் ந.பா.மேஹவர்ஷினி, புதுக்கோட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *