தொழில் வாய்ப்புத்தேடி நேரடி விண்ணப்பம் இனி இத்தாலிக்கு முடியாது

இத்தாலியில்  தொழில்வாய்ப்பு ஒன்றிற்காக சிறீலங்கா நாட்டைச் சேர்ந்தவர்கள்  நேரடியாக விண்ணப்பம் கொடுக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தாலி நாட்டிலுள்ள  தொழில் வழங்கும் நிறுவனங்கள்  மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் மட்டுமே அவை  செய்யப்பட வேண்டும் என சிறீலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த அறிவித்தலை இத்தாலிக்கான சிறீலங்கா தூதரகம், நேரடியாக  சிறீலங்கா  வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்திடம் அறிவித்துள்ளது.

இத்தாலியில் உள்ள தொழில் வழங்கும் நிறுவனங்களுக்கு  விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், பணியகம் மேலும் அறிவித்திருக்கிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *