உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நாட்டும் நிகழ்வு

உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு நல திட்டங்கள் சர்வதேச அளவில் நடைப்பெற்று வருகின்றன.

அந்த வகையில் “இனியாவது விழிப்போம்!இயற்கையோடு செழிப்போம் எனும் தொனிபொருளின் கீழ் இயற்கை மீட்பு அறக்கட்டளையால் கடந்த 19ம் திகதி கெஜல்நாயகன் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளை முன்வைத்து விழிப்புணர்வு செயற்திட்டமும்,மரக்கன்று நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.

இதன் போது இயற்கை மீட்பு அறக்கட்டளை உறுப்பினர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.இதன் போது மாணவர்களின் பயன்பாட்டிற்காக மஞ்சள் பையும் வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *