நாம் இலங்கையர்கள் எமக்கு காணி உரிமை வேண்டும்

இன்றைய தினம் மலையக மக்களின் காணி உரிமை நிகழ்வு நடைப்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோகணேசன் எமக்கு காணி உரிமை வேண்டும் அதுவே முழுமையான பிரஜா உரிமை என தெரிவித்திருந்தார்.

இதே வேளை பல ஆண்டுகளாக மலையக மக்கள் காணி இன்றி லயன் வீடுகளிலேயே வசித்து வருகின்றனர். இவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அதிகமானவை.சுகாதாரம் ,போக்குவரத்து,கல்வி ,உணவு,குடி நீர் என பல்வேறுப்பட்ட துறைகளிலும் மலையக மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மலையக தமிழ் மக்கள் இந்தியாவின் ஒரு குழு அல்ல, இலங்கையின் ஒரு குழு. இவர்கள்தான் இலங்கையில் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளனர், அதிக அந்நியச் செலாவணியை ஈட்டிய மக்களுக்கு இன்னும் காணி மற்றும் வீட்டு உரிமைகள் இல்லை என்பது கவலைக்குறிய ஓர் விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *