குழந்தையின் மரணத்திற்கு என்ன காரணம்

திகன ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அறுஷா அஷ்விதா வெல்கம என்ற இரண்டரை வயது குழந்தை கடந்த 22ம் திகதி காலில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக பேராதனை சிறுவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் 6 மணித்தியால சத்திர சிகிச்சைக்கு பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ம் திகதி உயிரிழந்துள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் குழந்தைக்கு வழங்கப்பட்ட மயக்க மருந்தாக இருக்கலாம் என சுகாதார நிபுணர் சங்கங்கள், பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயலிழந்த மயக்கமருந்து தடுப்பூசி குழந்தைகளுக்கு வழங்கப்பட மாட்டாது எனவும், தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட சிக்கல்களினால் இரண்டு வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானது என்பதை உறுதிப்படுத்துவதாகவும்,இவ்வாறான வலிமிகுந்த சூழ்நிலைகளில் வைத்தியசாலை அதிகாரிகள் குழந்தைகளுக்கு மயக்க மருந்தை வழங்கமாட்டார்கள் என சம்பந்தப்பட்ட வைத்தியசாலை அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதாரத்துறை தொடர்பான விடயங்களில் சில ஊடகங்கள் பொய்யாக செய்திகளை வெளியிடுவதாகவும், இது தொடர்பில் ஊடகங்கள் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று 21ம் திகதி மத்திய ,சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார உதவியாளர்களான 253 பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு விருது வழங்கும் வைபவம் கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இதன் பின்னர் ஊடகங்களுக்கு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *