பாதுகாப்பு பலப்படுத்தகம்படுகிறதா?

ஜனாதிபதி நாடு திரும்பும் வேளையில் உயர் அடுக்கு வாகன பேரணிக்கு எதிரான ,அரசியல் கருத்துக்களை கொண்டவர்களால் சில வகையான நாச வேலைகளை செய்யலாம் என்றும் ,சில ஆயுதக்குழுக்களினால் தாக்குதல் ,ஸ்னைப்பர் தாக்குதல் அபாயம் ,பொதுமக்களினால் குழப்ப நிலை மற்றும் ஆர்பாட்டங்கள் போன்ற இடையூருகள் ஏற்படுத்தப்படலாம் என்றும் , ஜனாதிபதி மற்றும் பிரமுகர்களின் உச்ச பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்குடன், ஜனாதிபதி ரணில்விக்ரம சிங்கஹ நாடு திரும்பும் போது கட்டு நாயக்க விமான நிலையத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேச பந்து தென்னகோன் ,மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இது தொடர்பில் உத்தரவு பிரபித்துள்ளார்.

இது தொடர்பில் 8 அம்சங்களின் கீழ் விளக்கத்துடன் விமான நிலையத்திற்கு வெளியேயும் உள்ளேயும் பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் நீண்ட விளக்கத்துடன் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இவ்வாறான உத்தரவுகள் பிறபிக்கப்படுவது வழக்கத்திற்கு மாறானது என்று பொலிஸ்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *