வருகிறதா… e bill?

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு விடயமும் டிஜிட்டல் மயமாகி செல்கின்றது.அந்த வகையில் இலங்கை மின்சார சபையானது டிஜிடல் முறையில் மின் பட்டியலை வழங்க தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் முதற் கட்டமாக , ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருமாறு தெஹிவளை ,களனி,ஶ்ரீ ஜயவர்தன புர ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

AC இலக்கத்தை தொடர்ந்து REGஎன type செய்து 1987என்ற எண்ணிற்கு SMS செய்து ,பதிவு செய்து கொள்ள முடியும்.இதே வேளை http//ebill.ceb.lk என்ற இணையத்தளத்தினூடாகவும் பதிவு செய்து கொள்ள முடியும்.

தற்காலத்தில் புதிய புதிய மாற்றங்களுடன் இலத்திரனியல் வாழ்க்கையோடு இணைந்துள்ளோம். அந்த வகையில் இந்த டிஜிடல் மின்பட்டியலானது புதியதொரு மாற்றமாக அமைந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *