(உயர்தர பரீட்சை-2022) செயன் முறை பரீட்சை ஆரம்பம்.

இன்றைய தினம் 2022ஆம் ஆண்டுக்கான உயர் தரப்பரீட்சைக்கான செயன் முறை பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இன்று முதல் எதிர்வரும் 6ம் திகதி வரை இப் பரீட்சைகள் நடைப்பெற இருக்கின்றன.

சங்கீதம்,நாட்டியம் ஆகிய பாடங்களுக்கான செயன்முறை பரீட்சை நடைப்பெற இருக்கின்றன. பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ,அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாதவர்கள் பரீட்சை திணைக்களத்தின் இணைய தளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் என்றும்.

மேலதிக விபரங்கள் ஏதும் தேவைப்பட்டால் 1911என்ற இலக்கத்தோடு தொடர்பு கொள்ள முடியும் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *