தென்தமிழ் அறக்கட்டளை நடாத்தும் சிறப்பு ஓவியப்போட்டி…!

தென்தமிழ் அறக்கட்டளை நடாத்தும் பாடசாலை மாணவர்களுக்கான மாபெரும் ஓவியம்போட்டி.

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் முகமாக வேம்பார் காமராஜர் அரங்கத்தில் 09.07.2023 திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இயற்கை காட்சி,சுற்று சூழல் பாதுகாப்பு ,காமராஜர் உருவப்படம் போன்ற தலைப்புகளின் கீழ் இவ் ஓவியப்போட்டி நடைப்பெறவள்ளது.1- 12 வகுப்பு உள்ளடங்களாக 3 பிரிவுகளை உள்ளடக்கியதாக போட்டியாளர்கள் இணைத்துக்கொள்ளபட இருக்கிறார்கள்.

வெற்றி பெரும் போட்டியாளர்களுக்கு 10 பரசுகள் வீதம் 3 பிரிவிற்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

மற்றும் போட்டி நடந்து முடிந்த மறு நிமிடமே முடிவுகள் அறிவிக்கப்படும் அதே வேளை தென்தமிழ் அறக்கட்டளையின் நூல் வெளியீட்டு விழாவும் ,தென்தமிழ் ஞான சுடர் விருது,கேடயம்,பதக்கம்,ஆகியன வழங்கப்படவுள்ளன.இதில் சிறப்பு அதிதியாக மஹாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி திருமிகு இரா.உமாபதி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *