ஆசிய தடகளப் போட்டியில். தமிழக வீரர் சாதனை..!

ஆசிய தடகளப்போட்டியில் இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த வீரர் சந்தோஷ் குமார் வெண்கலப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆண்களுக்கான 400 மீட்டர் தடை தாண்டுதல் ஓட்டப்போட்டியில் தான் வெங்கலப்பதக்கத்தினை வென்று சாதனை படைத்துள்ளார்.49.09 வினாடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார்.

ஆசிய தடகளப்போட்டிகள் தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில் 4 வது நாளான இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான போட்டியில் தான் வெற்றி பெற்று இருக்கிறார். இதே வேளை இந்தியாவிற்கு மேலும்
2 வெள்ளி பதக்கங்களும் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *