விமானம் விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் பலி

மண்ணில் தான் அடிக்கடி விபத்து நடக்கிறது என்று பார்த்தால் விண்ணிலும் அதே நிலை தான்.

நேற்று கொலம்பியாவில் வானில் பறந்துக்கொண்டிருந்த சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விமானி உட்பட மற்றைய 5 பேரும் முன்னால் ஜனாதிபதி அல்வாரோ யூரியின் வலதுசாரி சென்ட்ரோ டெமக்ராட்டிகோவின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதே வேளை அண்மையில் எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிட சென்ற ஹெலிகொப்ட்டர் ஒன்றும் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடதக்கது.இதன் போது இதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *