இவர்கள் தான் இன்னுமொரு மலர்கள்…!

நூலகம்


நூலகத்தில் அகத்தை
வைப்போர் இன்னொரு
நூலாய் மலர்வார் …!

தேனெனும் தாய் மொழியாம்
தாய்ப்பால் குடித்தெழுவார் …!

அமுதென ஒன்று உண்டோ
இல்லையோ ? அவரவர்க்கு
அவரவர் தாய் மொழியை
அமுதாய் கொள்வோம் …
நூலகம் சென்று கற்போம் …!

பள்ளி , கல்லுாரிப் படிப்பு
எல்லாம் இங்கு பொருள்
சேர்க்க மட்டும் உதவும் …!

நூலகம் சென்றால் அங்கே
வரலாறு பேசும் நூல்கள்
பல நூறு பாடம் கூறும் …!

கவிச் சுவை , கதைச்சுவை …
படிக்கப் படிக்க அறியாமை
ஓடிப்போகும் ….!

இன்றிருக்கும் நிலையை
மாற்றி புதியதோர் உலகம்
செய்யும் …!

தவறான பாதை
மாற்றி …தக்கதோர்
பாதை போடும் ….!

நூலகம்
வெறும் கட்டிடம் அல்ல …
அதில் ஆயிரமாயிரம்
கடவுள்கள் …
பற்பல நூல்களாய்
வாழ்கிறார்கள் …!

அவரவர் பட்டபாட்டை
கற்றறிந்த அனுபவத்தை
எழுத்தாய் வடித்து …
மானுட வாழ்வுயர …
புதுப் பாதை காட்ட
உயிர்ப்போடு
வீற்றிருக்கிறார்கள் …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *