இப்படியும் ஓர் ஆதங்கம்..!

ஆதங்கம்!!!

தேடுகிறேன் உண்மை அன்பை!


ஏங்குகிறேன் உண்மை பாசம்தேடி!


கரங்கொடுத்து உதவிபெற்றவர்கள்கூட உதாசீனப்படுத்தல் உள்ளத்தில் வலி!


நல்லநட்பாய் நான் நினைத்தவர்கள் துரோகம்,செய்ததன் காரணம் தெரியா உளைச்சல்!


உறவுகளோ பணத்தேவைக்காகவே பயன்படுத்திய கொடுமை!


இளமையதில் ஏதும்புரியவில்லை!


முதுமையணைக்க அன்பின் நெருக்கம் தேடி அலைபாயும்மனது!


அத்தனை அன்பும் போலி எனப்புரிந்தபின் விம்மித்தணியும் நெஞ்சமிது!


ஆதங்கம்தான் மிஞ்ச மனதுயரதில் வார்த்தைகளாக வடித்தேன்!

கோமதிசிதம்பரநாதன்
உறையூர்,திருச்சி3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *