உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பம்..!

இன்றைய தினம் சர்வதேச உலக கிண்ண போட்டிகள் அஹமதாபாத்தில் இடம்பெற இருக்கின்றன.

இவ்வாண்டு உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை,இந்தியா,பாகிஸ்தான்,இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

எனினும் இம்முறை உலக கிண்ண தொடரில் மேற்கிந்திய தீவுகள் பங்கேற்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் நடைப்பெற உள்ள போட்டியில் நடப்பு செம்பியனான இங்கிலாந்து அணி மற்றும் நிவுசிலாந்து அணி ஆகியன பல பரீட்சை நடத்த இருக்கின்றன.

2019 ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைப்பெற்ற உலக கிண்ண தொடரில் இங்கிலாந்து அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்திருந்தது.அந்த வெற்றியுடன் இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதே வேளை நியுசிலாந்து அணியும் வெற்றிப்பெறும் நோக்குடன் முழு மூச்சாய் செயற்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மழை குறிக்கிடாமல் இருந்தால் இன்றைய தினம் ஓர் சுவாரஷ்யமான போட்டியை கண்டு மகிழலாம்.

இன்றைய தினம் உலகிலேயே மிக பெரிய மைதானமான அஹமதாபாத் மைதனானத்தில் மதியம் 2.00 மணிக்கு போட்டிகள் ஆரம்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *