ஆளில்லா விமான தாக்குதலில் 100பேர் பலி..!

ஆளில்லா விமான தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் சுமார் 100 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இத்தாக்குதல் ஆனது சிரியாவில் இடம்பெற்றுள்ளது.சிரியா ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவ கல்லூரியில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போதே ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளதாகவுகம் , 240 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு யாரும் இன்னும் பொறுப்பேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *