டிக்டொக் எடுக்க சென்றவரகள் மூழ்கி மரணம்..!

வீடியோ மற்றும் புகைப்படங்களை டிக்டொக்கிற்கு எடுத்துவிட்டு மீண்டும் பயணித்த போது தோணியில் கட்டப்பட்டிருந்த குள்ளாதடி,இரண்டாக உடைந்ததையடுத்து தோணி வாவியில் கவிழ்ந்து அனைவரும் நீரில் மூழ்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

இதில் இருவர் காணாமல் போயிருந்ததையடுத்து மீனவர்களின் உதவியுடன் அவர்களை தேடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 4 பேர் நீந்தி கரை சேர்ந்ததாகவும் ,இருவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவமானது மட்டகளப்பு சீலாமுனை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் காத்தான்குடி பொலிஸார் ஆகியோரும் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *