08 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியமையே கொலைக்கு காரணம்..!

கடந்த 12ம் திகதி யாழ் கல்வியங்காட்டு பகுதியில் இடம் பெற்ற கொலைக்கு 08 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமையே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட நபர் கடத்தப்பட்டு இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.சித்திரவதை செய்யும் காட்சிகளை தொலைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலையான நபர் நேற்று முன் தினம் அவரின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.அவரின் மனைவியின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலையாளியின் உடலில் அடி காயங்கள் ,இரத்த கசிவு இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்படுகிறது.

இச்சமபவம் தொடர்பாக 2பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியும் தாயாருடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *