ஏவுகணை ஆயிரமாயிரம் பாய்கிறது..!

பசிக்கின்ற வயிறுக்கு போரிட்ட இனக்குழுக்கள்-இரத்த
ருசிகண்டு கேவலமாய்
ஆடுகிறதே இன்று…!

ஏவுகணைகள் ஆயிரமாயிரம்
ஏவுதலால் சாவுபல்லாயிரம்!

இனக்குழுக்கள் மோதலினால்
இன்னுயிர் இழந்தனராயிரம்..!

மூர்கமான மனிதராலே உலகம் அழியுது
மூச்சுவிடும் காற்றில்கூட அனல் தெறிக்குது…!

புல்பூண்டு முளையாமல் பூமி கிடக்குது
விடாக்கண்டன் கொடாக்கண்டன்போர் நடக்குது..!

உலகம் அழிந்தப் பின்னால்தான் வெறியடங்குமா?


கலகம் அதுமட்டும் தானே வாழ்க்கையாகுமா?


அறம் கொண்ட வாழ்க்கையினி வாழ முடியுமா?


அற்றுப்போகும் பூமிசொந்தம் ஏற்க முடியுமா?


தீர்வு அது இல்லாத சிக்கல் ஒன்றில்லை
சீராக்கிப் பார்க்க மட்டும் மனது வரவில்லை
மண்ணாசை கொண்டு சேர்க்கும் மண்ணுக்கடியிலே
பொன்னான இவ்வாழ்க்கை வாழ முடியல..!


சிறிதளவு நாட்டினிலே பெரிய குற்றமே
போரது தவிர்த்து விட்டால் வரும் வெளிச்சமே
மண்ணில் பிறந்த உயிர்க்கெல்லாம் உண்டு..!

சுதந்திரம்
கட்டுப்பாடு போட்டுவிட்டால் கருமாந்திரம்
தளைகளை சிறிதேனும் தளர்த்திக் கொள்ளலாம்
தவித்த வாய்க்கு தண்ணீர் போல வாழ வைக்கலாம்..!

கவிஞர் தமிழரசன் ,திருவாரூர் ,தர்மபுரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *