முழுமையான வாகன இறக்குமதிக்கு நடவடிக்கை..!

மீண்டும் முழுமையான அளவில் வாகனம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் , உரிய கொள்கைகளை அமைச்சரவையில் முன்வைத்ததன் பின்னர் வாகன இறக்குமதி தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எனினும் கடந்த காலங்களில் வாகன இறக்குமதி செய்ய தடை விதித்திருந்தமையால் வாகனங்களின் விலையும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *