மரணித்து போன மனிதம்..!

மரணித்துப் போன
மனிதம் …அன்பைக்
கழித்து விட்டு ,
கருணையைக்
கழித்துவிட்டு ,
மனிதாபிமானத்தைக்
கழித்து விட்டு …
கணக்கில் என்ன ஈவு ( மீதம் ) வரும் ?


மனித உருவில்
மிருகங்களே வரும் …
தனிமனித வாழ்வுரிமை
மதிக்கப்படாமல் …
அது என்ன ஆட்சி …
அதுயென்ன அதிகாரம் …


நாட்டுக்கு நாடு சண்டை
என்றால் …போர் வீரர்கள்
அடித்துக் கொள்ளட்டும்
எளிய மக்கள் ஏன் பலியாக
வேண்டும் … இங்கே
ஐ நா அவையென்றும் …
செஞ்சிலுவைச் சங்கம்
என்றும் எதற்கிங்கே …???


வெறும் வேடிக்கை பார்க்கவா ?
எந்தவொரு நாட்டிலும் அது
உள்நாட்டுக் கலவரவமே ஆனாலும்
ஒரு நாட்டுக்கு நாடு சண்டைகள்
என்றாலும் …அப்பாவி
மக்கள் பலியாகக் கூடாது …
அவர்கள் காப்பாற்றப் பட வேண்டும்
என்பது தானே இந்த
அமைப்புக்களின் சேவை …


அதையும் மறந்த இந்த நாளில்
உண்மையில் …
மனிதம் மரணித்துத் தான்
போனது … இனியேனும்
தனியொரு மனிதனிலிருந்து
நாடு , உலகம் என புதிதாய்
விடியட்டும் …ஆறறிவு ….

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *