மனித போர்வைக்குள் மிருகங்கள்..!

இதயம்…. ❗

எலும்புகள் இணைப்பில்லா
மாமிசம்
இயக்கத்தில்
ன்றும்மில்லை நிரந்தரம்
நினைத்தபடி ஆட்டிப் படைக்க
அதற்கு உண்டு சுதந்திரம்
இதயம்
சீர்பெற்றால்
செயல் களும் சீராகும்❗

” நீரின்றி அமையாத உலகு” போல்
உலகில் இதயமின்றி அமைவதில்லை உயிர்கள்
உயிர்கள் வாழ
இதயம் என்றால்
இதயம் வாழ மனித நேயம்… ❗

இதயம் துடித்தால்
உயிர் வாழும்
உயிரே துடிக்கிறது
இன்று
இதயம் நடிக்கிறது
இதயம் இருக்கிறது
இங்கு ஈரமில்லை
இரத்த ஈரம் இருக்கிறது
அங்கு இதயமில்லை… ❗

மனித போர்வைக்குள்
மிருகங்கள்
மனிதனை
கொன்று குவிக்கும் கொடூரம்
வரையறையற்ற வன்முறை
வாழ்வதா ❓சாவதா ❓
விடை காண முடியாத
வினாக்கள்
தொடரும் கமாக்களாய் …..❗

காலம் இதற்கு
பதில் சொல்லப்போவதில்லை
ஏழாம் அறிவும்
நமக்குத் தேவையில்லை
வாழும் கொஞ்சக் கால
வாழ்க்கை
நெஞ்சுக்குள் துடிக்கும்
இதயம்
உணர்வுகளோடு துடிக்கட்டும் ❗


அ. அ. நவாஸ்
வவுனியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *