கிறிஸ்தவ மிஷனரியால் நிர்வகிக்கப்பட்டு வந்த பாலஸ்தீன பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த வைத்திய சாலை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்…!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் 11வது நாளாக போர் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலிய விமானப்படையினர் பொது மக்கள் தஞ்சமடைந்திருந்த வைத்திய சாலை மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக 500ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.நேற்றைய தினம் இரவு இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. சில நிமிடங்களிலே இந்த வைத்திய சாலை தரை மட்டமாகியுள்ளது.

Al-Ahli Baptist என்ற குறித்த வைத்தியசாலையே இத்தாக்குதலுக்கு இழக்காகியுள்ளது.இந்த வைத்தியசாலையானது Anglican church என்ற கிறிஸ்தவ மிஷனரி நிர்வாகத்தால் நடத்தப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதலை பல்வேறு நாடுகளும் ,அமைப்புகளும் கண்டித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *