கடல்அலைகளுக்கு ஆணையிட முடியுமா..?

உரிமை உயிரியற்கை
ஆண்டான் அடிமை
மானுடத்தின் படைப்பு …

காற்றுக்கு … வேலியிடவும் …
கடல் அலைகளுக்கு
ஆணையிடவும் …
காட்டாற்றுப் பெரு வெள்ளத்திற்கு பாதை
வகுக்கவும் …
பூக்களைப் பூக்கச்
செய்யவும் …
ஏன் …
தன்னிதயத்தையே துடிக்கச் செய்யவும் …
மின்னலைத் தடுக்கவுமான …!

சூத்திரத்தை அறியவுமான … சிற்சில
இயற்கையின் மேல் ஆதிக்கம் செலுத்தவுமான
அறிவு இது வரை இவனுக்கு இல்லை …!

அதனால் அவைகளை
மட்டுமே அடிமைப் படுத்தாமல் இருக்கிறான் …!

இல்லையெனில் …
இந்தப் பிரபஞ்சக்
கோள்களையே கூட
உதைத்து விளையாடிவிடுவான் …!

பாவம் அதனால் தான் இந்தப்
பிரபஞ்சம் பிழைத்துக்
கிடக்கிறது …!

என எண்ணும் அளவுக்கு மனித இனத்தின் ஆணவம்
தலைவிரித்து ஆடுகிறது …!

ஆறறிவின் வளர்ச்சி
மனிதன் மாமனிதனாகவும் …
தெய்வீகம் உணரவும்
என்பதையறியா ? பேதை அறிவு … வெறும் போதை அறிவு …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *