மனித இனத்தின் மனப்பதிவு..!

அது என்னவோ
நான் பார்த்ததினால்
நீ பார்த்தாயா ?

நீ பார்த்ததினால் நான் பார்த்தேனா ?

இன்றுவரை … தெரியவில்லை எனக்கு …
இங்கே காமம் தூண்ட
காதல் வேடம் பூண்டது … இங்கே நீயா ? அல்லது நானா ?

ஆனால் காமம் இயற்கையின் செயல்பாடு … அது எப்படியும் தனது வாரிசை , தனது அடையாளத்தை ,
தனது இனத்தை
விதைத்து விட்டுச்
செல்லவே விரும்ப வேண்டும் என … இந்த இயற்கையின் அழுத்தமான அங்கீகாரம் … அதில் உனக்கும் எனக்கும் …
மட்டுமே வந்த உணர்ச்சி இல்லை!

இது …இது உலகலாவிய , உயிரினங்கள் அனைத்திற்குமான உணர்ச்சி …!

ஆனாலும் ஏதோ ஒரு பதிவு … உயிரின் கருப்பதிவோ ?

மனித இனத்தின் மனப் பதிவோ ? அது பொறாமையோ ?

தன்னால் அடைய முடியாத எதையும் எவரும் அடைந்து விடக் கூடாது …! எனும் அன்பற்ற மனமோ ?

யான் அறியேன் … காதல் பெரும்பாலும் …
தோற்றுத்தான் போகிறது …அட அதனால் தானோ ? என்னவோ ? மனித இனங்கள் உருவத்தில் பெறுகியது …!

உள்ள அளவில் காய்ந்த பாலைவனம் போல … இந்த உலகம் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *