நச்சு புகையினை சுவாசித்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

நச்சி கலந்த புகையினை சுவாசித்ததனால் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது தலவாக்கலை நகரில் பதிவாகியுள்ளது.நேற்று மாலை ஆடை மற்றும் அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றின் ஊழியர்கள் நச்சு புகையை சுவாசித்து தலவாக்கலை வைத்தியசாலையில்,சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது, கடையின் ஜெனரேட்டர் இயக்கப்பட்டதால்,ஜெனரேட்டரில் இருந்து வெளியேறிய நச்சு புகை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நோய்வாய்ப்பட்டவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *