இது அனைத்து நாட்டவருக்கும் சொந்தமானதா?

ரோஜா

பாரசீக தேசத்தின்
கவினுறு மலராம்


பாசத்தை வெளிக்காட்ட
நல்லதொரு உறவாம்


காதலை காட்டிவிட
சிவப்பென கொள்வர்


மரியாதை கூட்டிவிட
மஞ்சளதைதருவர்


மேன்மையைக் காட்டிநிற்க
வெள்ளை மலர்தருவர்


எவ்வண்ணம் ஆயினும்
ரோசாமலர் அழகே


நம்மெண்ணம் காட்டிநிற்க
அடையாளம் அதுவே


மருந்தாக பலநேரம்
பயனாவது உண்டு


எந்நாட்டு மலரெனினும்
எல்லார்க்கும் சொந்தம்


ரோஜாக்கள் காட்டி விடும்
நம்முடைய பந்தம்.

பசுமைத்தமிழரசன்
தகடூர் சு தமிழரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *