பஸ் மோதுண்டு 40அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து..!
இன்று இடம் பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது பதுளை மொரஹெல வீதியில் இடம் பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்திற்கு சொந்தமான பேருந்தும் ,மற்றுமொரு பேருந்தும் மோதி 40 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய 8 பேர் பதுளை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.